search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குட்கா கடத்தல்"

    • கார்களில் தலா ஒரு டன் என மொத்தம் 3 டன் எடை மதிப்பில் ஹான்ஸ், குட்கா, போன்ற புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது.
    • சென்னைக்கு யாருக்கு கடத்தி சென்றார்கள் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா சுங்கச்சாவடியில் இன்று அதிகாலை வாலாஜா போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமன் ராஜா தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் மகாராஜன் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி செல்வதற்காக அதிவேகமாக வந்த 3 கார்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். கார்களில் தலா ஒரு டன் என மொத்தம் 3டன் எடை மதிப்பில் ஹான்ஸ், குட்கா, போன்ற புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது.

    இதை தொடர்ந்து போலீசார் கார்களுடன் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    அதனை கடத்தி வந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பரத்குமார் (வயது22), கல்யாணராம் (26), சுரேஷ் (25), கணபத்ராம் (28) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட 3 கார்களின் மதிப்பு ரூ.15 லட்சம் எனவும், 3 டன் குட்கா பொருட்களின் மதிப்பு ரூ.6 லட்சம் என மொத்தம் ரூ.21 லட்சம் மதிப்பில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    சென்னைக்கு யாருக்கு கடத்தி சென்றார்கள் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடைகளில் அவ்வப்போது சென்று சோதனை செய்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பவானி:

    ஈரோடு மாவட்டத்தில் சமீபகாலமாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் புழக்கம் அதிகளவில் இருந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவிட்டார்.

    இதன் பேரில் மாவட்ட முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடைகளில் அவ்வப்போது சென்று சோதனை செய்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று நள்ளிரவு ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே நசியனூர் ரவுண்டானா பகுதியில் சித்தோடு சப்-இன்ஸ்பெக்டர் பிரகாசம் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது காரின் உள்ளே மூட்டை மூட்டையாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது.

    இதனைத்தொடர்ந்து காரில் இருந்த 2 வாலிபர்களை விசாரணைக்காக சித்தோடு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த அசோக் குமார் (34) மற்றும் கோவில் (28) என தெரிய வந்தது. 2 பேரும் தற்போது ஈரோடு கொல்லம்பாளையம் இந்திரா நகர் பகுதியில் வாடகை குடியிருந்து வந்ததும் தெரிய வந்தது.

    தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் பெங்களூரில் இருந்து கார் மூலமாக குட்கா பொருட்கள் கொண்டு வந்து ஈரோடு, பெருந்துறை, பவானி உட்பட பல்வேறு ஊர்களில் உள்ள சின்ன, சின்ன வியாபாரிகளுக்கு விற்றது தெரியவந்தது. காரில் மொத்தம் 80 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.70 ஆயிரத்திற்கு மேல் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

    இது குறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 80 கிலோ குட்கா, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த விவகாரத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் சரக்கு வாகனம் ஒன்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த வெள்ளோடு அருகே உள்ள நல்லகவுண்டன் பாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட குட்கா பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக பெருந்துறை டி.எஸ்.பி.க்கு ரகசிய தகவல் வந்தது.

    இதனைத்தொடர்ந்து பெருந்துறை டி.எஸ்.பி. கோபாலகிருஷ்ணன் உத்தரவின் பெயரில் இன்ஸ்பெக்டர் ராஜகண்ணா, சப்-இன்ஸ்பெக்டர்கள் ருத்ராஜ், வீரமணிகண்டன் மற்றும் தனிப்பிரிவு போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு சென்று அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வீட்டில் 800 கிலோ குட்கா பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இந்த வீட்டின் உரிமையாளர் பிரசாத் என்பதும், காய்கறி வியாபாரம் செய்து வந்ததும் தெரிய வந்தது. மேலும் வீட்டில் சோதனை செய்ததில் ரூ.3.40 லட்சம் ரொக்க பணம், ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் சரக்கு வாகனம் ஒன்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    தற்போது பிரசாத் தலைமறைவாக உள்ளார். அவரை பிடிக்க போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். அவர் பிடிப்பட்டால் தான் எங்கிருந்து குட்கா கொண்டு வரப்படுகிறது. அதை யாருக்கு விற்க கொண்டு செல்கிறார்கள் என்ற விவரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

    • 2 மினி லாரிகளை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
    • மினி லாரிகளில் இருந்த 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பகுதியில் இருந்து ஏராளமான வாகனங்களில் அண்டை மாநிலமான கேரளாவுக்கு காய்கறிகள் கொண்டு செல்லப்படுகிறது.

    அதுமட்டுமல்லாமல் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களும் கொண்டு செல்லப்படுகிறது. இவ்வாறு செல்லும் லோடு வாகனங்களில் பொருட்களுக்கு இடையே அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் கடத்தப்பட்டு அவ்வப்போது சோதனையின் போது சிலர் சிக்கி கொள்கின்றனர்.

    இந்நிலையில் காய்கறிகள் ஏற்றிக்கொண்டு வரும் மினி லாரியில் குட்கா கடத்தி கொண்டுவரப்படுவதாக பாவூர்சத்திரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து. உடனடியாக போலீசார் பாவூர்சத்திரம் அருகே உள்ள சிவகாமிபுரம் விலக்கில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியே காய்கறிகளை ஏற்றி சென்ற 2 மினி லாரிகளை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா சுமார் 32 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ. 3.35 லட்சம் என்பதும், மொத்த எடை 391 கிலோ என்றும் தெரியவந்தது. இதையடுத்து மினி லாரிகளில் இருந்த 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

    அதில் அவர்கள் கீழப்பாவூரை சேர்ந்த முருகன்(31), ஆரியங்காவூர் சத்தியமூர்த்தி (35) மற்றும் அரியப்புரத்தை சேர்ந்த முருகன் (39) என்பது தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்கள் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், கைது செய்து அவர்களை சிறையில் அடைத்தனர். இதில் தொடர்புடைய மேலும் 4 பேர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வலைவீசி தேடி வருகின்றனர். கடத்தலுக்கு பயன்படுத்திய 2 மினி லாரிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • குட்கா பொருட்கள் விற்பனை நடைபெற்று வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
    • போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தங்களது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீவிர ரோந்து பணியிலும், கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அவ்வப்போது கடைகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை நடைபெற்று வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து கடந்த ஒரு வாரமாக பெருந்துறை போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

    பல்வேறு கடைகளில் குட்கா பொருட்களை விற்பனை செய்து வந்த 21 நபர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.99 ஆயிரத்து 567 மதிப்புள்ள 67.95 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் குட்கா விற்பனை செய்த கடைகளை பூட்டி சீல் வைத்தனர்.

    • போலீசார் ஜூஜூவாடி சோதனைச்சாவடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
    • பான் மசாலா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    ஓசூர்:

    ஓசூர் சிப்காட் போலீசார் நேற்று மாலை, ஜூஜூவாடி சோதனைச்சாவடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு வேனை, தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.

    அதில், 80 மூட்டை மற்றும் 4 அட்டைப்பெட்டிகளில் 640 கிலோ எடை கொண்ட ஹான்ஸ், பான் மசாலா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் சந்தை மதிப்பு ரூ.5, 30,000 ஆகும். இதனை சரக்கு வேனுடன் பறிமுதல் செய்த போலீசார், மேலும் விசாரணை நடத்தியதில், கர்நாடக மாநிலம் பெங்களூரிலிருந்து விற்பனைக்காக சேலம் பகுதிக்கு அந்த குட்கா பொருட்களை கடத்தி சென்றது தெரிய வந்தது.

    இதையடுத்து வேன் டிரைவர் அஜித்குமார் (26) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் சேலம் சன்னியாசிகுண்டு குமரகிரி பேட்டையை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாய்க்கால்மேடு பகுதியில் பல்வேறு கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது.
    • குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஈரோடு:

    தமிழக அரசு குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டதுடன் பள்ளி மற்றும் கல்லூரி உள்ள பகுதியில் புகையிலை பொருட்களை விற்பனை செய்யவும் தடைவிதிக்கப்பட்டு உள்ளது.

    இதன்படி ஈரோடு மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில் மாவட்ட போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அவ்வபோது ரகசிய தகவலின் பேரில் பெட்டிக்கடை, மளிகை கடை, டீக்கடை, பேக்கரி கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்திருப்பவர்களை கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை வாய்க்கால்மேடு பகுதியில் பல்வேறு கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது.

    இந்த கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரிகள் அமைந்துள்ள பகுதியின் அருகே தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்து வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் பெருந்துறை போலீசார் ரகசிய விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது வாய்க்கால்மேடு பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் சோதனை செய்த போது விற்பனைக்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ.1.50 லட்சம் மதிப்பிலான 26 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    குட்கா பொருட்களை விற்பனை செய்து வந்த பெருந்துறை பிச்சாண்டம்பாளையத்தை சேர்ந்த பாலசுப்பிரமணி மற்றும் ஈரோடு ரங்கம்பாளையம் பகுதியை சேர்ந்த எட்வர்டு அவரது அண்ணன் மகன் அருண்குமார் ஆகிய 3 பேரை கைது செய்து பெருந்துறை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    பெருந்துறையில் கல்லூரி பகுதியின் அருகே தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • 2-வது முறையாக புகையிலை பொருட்களை விற்பனை செய்த 18 கடைகள் அதிரடியாக மூடப்பட்டது.
    • குட்கா மற்றும் நிக்கோட்டின் கலந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட பான்மசாலா, குட்கா மற்றும் நிக்கோட்டின் கலந்த புகையிலை பொருட்களின் பயன்பாட்டினை முற்றிலும் ஒழிக்கும் வகையில் காவல் துறை உயர் அலுவலர்கள் மற்றும் காவலர்களுடன் உணவு பாதுகாப்புத்துறை திருவள்ளுர் மாவட்ட நியமன அலுவலர் கலந்தாய்வு மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்களுடன் இணைந்து திருவள்ளுர் மாவட்டத்தில் கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது.

    மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உணவு பாதுகாப்பு குறித்த மாவட்ட அளவிலான ஆலோசனைக்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக அனைத்துத்துறை உயர் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

    முன்னதாக இந்த கூட்டாய்வில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை ஆணையர் லால்வேனா கலந்துகொண்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது 32 கடைகளில் சுமார் 273 கிலோ தடைசெய்யப்பட்ட பான் மசாலா, குட்கா மற்றும் நிக்கோட்டின் கலந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.1 லட்சத்து 55 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டது.

    மேலும் ஏற்கனவே விற்பனை செய்து அபராதம் விதித்த போதும் 2-வது முறையாக புகையிலை பொருட்களை விற்பனை செய்த 18 கடைகள் அதிரடியாக மூடப்பட்டது. இது குறித்து மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் கூறியதாவது:-

    பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் பான்மசாலா மற்றும் குட்கா பொருட்கள் விற்கப்படுவதை கண்டறிந்தால் உடனடியாக நுகர்வோர் குறைதீர்ப்பு செயலியான Tnfood safety consumer app மற்றும் unavupukar@gmail.com என்ற மின்னஞ்சல், https://foscos.fssai.gov.in என்ற இணைய தளம் மற்றும் 94440 42322 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம். புகார் அளிப்பவர்கள் பெயர்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும்

    மாவட்டம் முழுவதும் அதிலும் முக்கியமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா மற்றும் நிக்கோட்டின் கலந்த புகையிலை பொருட்கள் விற்பதை கண்டறிந்து முற்றிலும் ஒழிப்பதற்கு தொடர் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அனைத்து பள்ளிகளிலும் குட்கா, புகையிலையால் ஏற்படும் தீங்குகள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அந்தந்த பள்ளிகளில் தொடர்பு ஆசிரியர் ஒருவரை நியமித்து மாணவர்களின் பயன்பாட்டை கண்டறிந்து பள்ளிக்கு அருகில் புகையிலை விற்பனை குறித்து உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு தெரிவிக்குமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ்நிலையம், மற்றும் பயணவழி உணவகங்களில் மாவட்ட நியமன அலுவலர் மற்றும் சம்பந்தப்பட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அடிக்கடி கள ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுக்கு சுத்தமான, சுகாதாரமாக உணவு வழங்குதலை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்

    • உணவு பாதுகாப்பு அதிகாரிகளுடன் இணைந்து கடை நிரந்தரமாக மூடி சீல் வைக்கப்படும்.
    • 16 பேரின் வங்கி கணக்குகள் உள்ளிட்ட மொத்தம் ரூ. 25 லட்சம் பணம் முடக்கப்பட்டுள்ளது.

    ராயபுரம்:

    கடைகளில் குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனைக்கு தடை உள்ளது. எனினும் தடையை மீறி புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.

    அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்தாலும் புகையிலை விற்பனை தொடர்ந்து நீடித்து வருகிறது. மேலும் பள்ளி, கல்லூரி அருகில் உள்ள கடைகளிலும் குட்கா பொருட்கள் விற்கப்படுவதால் மாணவர்கள் போதைக்கு அடிமையாகும் சூழல் ஏற்பட்டு உள்ளது. இதனை தடுக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    வடசென்ைன பகுதியில் குட்கா, புகையிலை விற்பனை தடையை மீறி அதிகஅளவில் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் புது வண்ணாரப்பேட்டை போலீஸ் நிலைய வளா கத்தில் உள்ள சமுதாய நலக் கூடத்தில் வியாபாரி களுக்கு போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தர வின் படி வண்ணாரப் பேட்டை போலீஸ் துணை கமிஷனர் சக்திவேல் தலை மையில் நடைபெற்றது.

    இதில் வண்ணாரப் பேட்டை, திருவொற்றியூர், புது வண்ணாரப்பேட்டை, ராயபுரம், காசிமேடு, தண்டையார்பேட்டை போன்ற பகுதியை சேர்ந்த பெட்டிக்கடை, டீக்கடை, பழ வியாபாரிகள் என மொத்தம் 150 பேர் கலந்து கொண்டனர்.

    அப்போது போலீசார் பேசும்போது, கடைகளில் தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலை மற்றும் போதை பொருட்களை விற்பனை செய்யக்கூடாது.தடையை மீறி விற்பனை செய்தால் வங்கி கணக்குகள் முடக்கப் பட்டு, மாநகராட்சி மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகளுடன் இணைந்து கடை நிரந்தரமாக மூடி சீல் வைக்கப்படும். மேலும் கைது நடவடிக்கை எடுக்கப் படும்.

    பள்ளி, கல்லூரிகள், மற்றும் பொது மக்களுக்கு போலீசாரின் உதவி செல்போன் எண்கள் ஆங்காங்கே வைக்கப்படும். ஏற்கனவே போதைப் பொருட்கள் விற்பனை செய்தவர்கள் மீண்டும் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் வேறு தொழில் செய்யவும் அல்லது வியா பாரம் செய்ய உதவி தேவைப்பட்டால் போலீசார் சார்பில் உதவி செய்து தரப்படும் என்று தெரி வித்தனர்.

    பின்னர் போலீஸ் துணை கமிஷனர் சக்திவேல் நிருபர்களிடம் கூறும்போது, வண்ணாரப்பேட்டை காவல் மாவட்டத்தில் உள்ள பெட்டிக்கடை, டீக்கடை, பழக்கடை போன்ற கடைக ளில் கஞ்சா, மாவா, குட்கா போன்ற பொருட்களை விற்பனை செய்தவர்கள் மீது இதுவரை 42 வழக்குகள் போடப்பட்டுள்ளது. அதில் 51 பேர் கைதாகி உள்ளனர்.

    இதில் 16 பேரின் வங்கி கணக்குகள் உள்ளிட்ட மொத்தம் ரூ. 25 லட்சம் பணம் முடக்கப்பட்டுள்ளது. தடையை மீறி போதைப் பொருட்கள் விற்பனை செய்தால் கைது நடவடிக்கை யை தொடர்ந்து குண்டர் சட்டம் பாயும் என்றார்.

    • 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 48 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • 3 இருசக்கர வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

    சென்னை மாநகர போலீசார் கடந்த 25-ந்தேதி முதல் 31-ந்தேதி 7 நாட்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு புகையிலைப் பொருட்கள் கடத்துவதை தடுக்க நடவடிக்வகை எடுத்தனர். இது தொடர்பாக 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 48 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 456.9 கிலோ குட்கா புகையிலை பொருட்கள், 743.9 கிலோ மாவா, பணம் ரூ.28,720/-, 1 செல்போன் மற்றும் 3 இருசக்கர வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

    புகையிலைப் பொருட்கள் உள்பட சட்டவிரோத பொருட்களை கடத்தி வருபவர்கள், பதுக்கி வைப்பவர்கள், விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • கிருஷ்ணகிரி-தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் திம்மாபுரம் பகுதியில் காவேரிப்பட்டினம் போலீசார் வாகனச்சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
    • கர்நாடகா மாநிலம் அத்திப்பள்ளியில் இருந்து குட்கா பொருட்களை சேலத்துக்கு கடத்தி சென்றதும் விசாரணையில் தெரியவந்தது

    காவேரிப்பட்டினம்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தில் கிருஷ்ணகிரி-தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் திம்மாபுரம் பகுதியில் காவேரிப்பட்டினம் போலீசார் வாகனச்சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கர்நாடகாவில் இருந்து வேகமாக வந்த காரை வழிமறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது காரில் இருந்தவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் காரை திறந்து சோதனை செய்தபோது அதில் 515 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் இருந்தன.

    இதனையடுத்து காவேரிப்பட்டினம் போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் குட்கா பொருட்களை கடத்தியவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மனோ கர்சிங் (வயது 27), மதன்சிங் (19) என்பதும் அவர்கள் கர்நாடகா மாநிலம் அத்திப்பள்ளியில் இருந்து குட்கா பொருட்களை சேலத்துக்கு கடத்தி சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.

    இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் 2 பேரையும் கைது விசாரணை செய்து வருகின்றனர். குட்கா பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர்.

    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் ரோட்டோர 15 அடிபள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
    • போலீசார் விபத்துக்குள்ளான காரையும், குட்கா பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

    கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற கார் ஒன்று சிங்காரப்பேட்டை புறவழி சாலை நாயக்கனூர் பிரிவு ரோட்டில் அதிகாலை வந்தது.

    அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் ரோட்டோர 15 அடிபள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் சிங்காரப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சிங்காரப்பேட்டை போலீசார் காரை சோதனை செய்யும் போது அந்த காரில் தடை செய்யப்பட்ட குட்கா 12 மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விபத்து நடந்த உடனே வண்டி ஓட்டி வந்த டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இது குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் விபத்துக்குள்ளான காரையும், குட்கா பொருட்களையும் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து காரில் குட்கா பொருட்களை கடத்தி வந்த மர்ம நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதே போல் சில மாதங்களுக்கு முன்பு பெங்களூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்று கொண்டிருந்த போது ஊத்தங்கரையில் உள்ள பள்ளி அருகே விபத்தில் சிக்கிய காரில் இருந்து குட்கா பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஊத்தங்கரை வழியாக அடிக்கடி இதுபோன்று குட்கா கடத்தும் வாகனங்களை பரிசோதனை செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×